விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்..

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும்  ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரச வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.