வியானி கால்வாயில் விழுந்த வாகனத்தில் பயணம் செய்தோர் குறித்து தகவல் இல்லை…

பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்து கொண்டிருந்த சொகுசு ஜீப் ஒன்று இன்று(26) அதிகாலை வியானி கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொலன்னறுவை – ஹிங்குராங்கொடை பிரதேச வர்த்தகர் ஒருவரின் ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் காவற்துறை மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் வாகனத்தினை கால்வாயில் இருந்து நில பகுதிக்கு கொண்டு வந்துள்ள இந்நிலையில் ஜீப் ரக வாகனத்தில் எந்த ஒரு நபரும் இருக்கவில்லை என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Rish