வில்பத்து தொடர்பான அறிக்கை இன்று(03) ஜனாதிபதியிடம் கையளிப்பு…

வில்பத்து மற்றும் மன்னார் பிரதேசங்களில் இடம்பெற்று வருவதாக கூறும் காடழிப்பு மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையொன்று இன்று(03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்படவுள்ளது.

பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர சதரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளினால் கடந்த 31ம் திகதி விலத்திகுளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தை தொடர்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.