வட மாகாண விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகிய இருவரும் தனது பதவி இராஜினாமா செய்ததின் போது, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிய கடிதத்தின் பிரதி தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.
மேலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள விவசாய அமைச்சர் பதவி தொடர்பில் பதில் அமைச்சராக இன்று(21) வடக்கு முதல்வர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.