(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள அனைத்து வீதிகளது பெயரும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, வேறு மொழிகளில் வீதிகளில் பெயரிட வேண்டாம் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.