ஜேர்மனியைச் சேர்ந்த பெண்ணொருவர் வீதியில் கண்டெடுத்த 48,000 யூரோ (சுமார் 78 இலட்சம் ரூபா) பணத்தை பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
கொலோன் நகரிலுள்ள வீதியொன்றில் கிடந்த பையொன்றை பெண்ணொருவர் திறந்து பார்த்தபோது அதற்குள் 48,000 யூரோ பணம் இருப்பதை அறிந்து அவர் வியப்படைந்தார்.
அவ்வேளையில் அப் பகுதியில் மேற்படி பணத்தின் உரிமையாளர்கள் எனக் கருதக்கூடிய எவரும் இருக்கவில்லை. இவ்வாறான நிலையில் இப்பணத்தை நாமே வைத்துக்கொண்டால் என சபலப்புத்தி சிலருக்கு ஏற்படும். ஆனால், மேற்படி பெண், அப் பணத்தை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அப் பையை ஆராய்ந்த அதிகாரிகள் அதற்குள் இருந்த அடையாள அட்டையொன்றின் மூலம் அதன் உரிமையாளரை இனங்கண்டு அந் நபருடன் தொடர்புகொண்டனர்.
பின்னர் 52 வயதான நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று அப்
பணத்தை பெற்றுக்கொண்டார். 32 வயதான பெண்ணொருவரே நேர்மையுடன் இப் பணத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.
பணத்தை தொலைத்து மீளப் பெற்றுக்கொண்ட நபர் ஜேர்மன் சட்ட விதிகளின் படி அப் பெண்ணுக்கு 1450 நயரோ (சுமார் 24,000 ரூபா) வெகுமதியாக வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.