வீதியில் கண்டெடுத்த 78 இலட்சம் ரூபா பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்

ஜேர்­ம­னியைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வீதியில் கண்­டெ­டுத்த  48,000 யூரோ (சுமார் 78 இலட்சம் ரூபா) பணத்தை பொலிஸார் மூலம் உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

கொலோன் நக­ரி­லுள்ள வீதி­யொன்றில் கிடந்த பையொன்றை பெண்ணொ­ருவர் திறந்து பார்த்­த­போது அதற்குள் 48,000 யூரோ பணம் இருப்­பதை அறிந்து அவர் வியப்­ப­டைந்தார்.

அவ்­வே­ளையில் அப் ­ப­கு­தியில் மேற்­படி பணத்தின் உரி­மை­யா­ளர்கள் எனக் கரு­தக்­கூ­டிய எவரும் இருக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் இப்­பணத்தை நாமே வைத்­துக்­கொண்டால் என சப­லப்­புத்தி சில­ருக்கு ஏற்­படும். ஆனால், மேற்­படி பெண், அப்­ பணத்தை அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்துச் சென்று அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்தார்.

அப்­ பையை ஆராய்ந்த அதி­கா­ரிகள் அதற்குள் இருந்த அடை­யாள அட்­டை­யொன்றின் மூலம் அதன் உரி­மை­யா­ளரை இனங்­கண்டு அந்­ ந­ப­ருடன் தொடர்­பு­கொண்­டனர்.

பின்னர் 52 வய­தான நபர் ஒருவர் பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று அப்­
ப­ணத்தை பெற்­றுக்­கொண்டார்.  32 வயதான பெண்­ணொ­ரு­வரே நேர்மையுடன் இப்­ ப­ணத்தை பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு சென்றிருந்தார்.

பணத்தை தொலைத்து மீளப்­ பெற்­றுக்­கொண்ட நபர் ஜேர்மன் சட்ட விதி­களின் படி அப் பெண்ணுக்கு 1450 நயரோ (சுமார் 24,000 ரூபா) வெகுமதியாக வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.