வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

(FASTNEWS|COLOMBO) – கொழும்பில் நேற்று இரண்டு மணித்தியாலயங்கள் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

சீ.சீ.டி.வி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளதுடன், வீதி விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.