அமைச்சரவை மறுசீரமைப்பு, எதிர்வரும் வெசாக் பௌர்ணமிக்குப் பின்னர் இடம்பெறுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர், குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பு இன்றைய தினம்(27) இடபெறுவதாக இருந்தது.
எனினும், அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிக்கும் பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில், வெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே, இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமென மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
####