முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று(28) அதிகாலை நாவலப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களின் பின்னர், குறித்த இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் வௌியிட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.