தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் குறித்த சங்கத்தினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஊடாக வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் 15 ஆயிரம் மாணவர்கள் என்ற எண்ணிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.