வெலிகட சிறைச்சாலையின் கூரையில் ஏறி இன்று (13) காலை முதல் ஆர்ப்பாட்டம் செய்த பெண்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.