வெலிகம பிரதேச துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது…

வெலிகம குருபெவில பிரதேச ஹோட்டல் ஒன்றில் இன்று(20) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் இல்லை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைதாகியுள்ளோரில் இருவர் துபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.