வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேரை அடுத்த மாதத்திற்குள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் கூறினார்.
தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தங்காலை சிறைச்சாலையை மூடியுள்ளதுடன் அங்கிருந்த சிறைக் கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.