கடந்த சனிக்கிழமை வெலிக்கட சிறைச்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைதி ஒருவரை பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு வந்திருந்த போதே குறித்த பெண்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த சம்பவத்திடன் தொடர்புடைய 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.