சீஎஸ்என் தொலைகாட்சி அலைவரிசையின் பணச்சலவை குற்றச்சாட்டில் விரைவில் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் முன்னணி தலைமை பதவியொன்றை வகித்த யசாரா அபேயநாயக்க அவர்களையும் கைது செய்வதற்காக நிதி மோசடி குற்ற பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், யசாரா நாட்டில் இப்போது இல்லை எனவும் பிரபல ஆங்கில பத்திரகையான சண்டே டைம்ஸ் (sunday times) செய்தி வெளியிட்டிருந்தது.
அது அவ்வாறிருக்க மேற்குறித்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில், யசாரா தனது முகநூல் பக்கத்தில்,
“யசாரா அபேயநாயக்க வெளிநாடு சென்றுள்ளாராம். எனக்கென்றால் நீண்ட காலமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதிருந்தது. ஆனால், இன்று நான் புறக்கோட்டைக்கு சென்றேன்” என பதிவு செய்திருந்தார்.
முந்தைய இணைப்பு
யசாரா அபேயநாயக்கவையும் கைது செய்ய திட்டம்?
