எதிர்வரும் 2017ம் ஆண்டு முதல் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் போது, அரச திறைச்சேரியில் அனுமதி பெற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் ரஷ்யாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தனர்.
குறித்த இந்த பயணம் ஜனாதிபதியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே மேற்குறித்த இந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.