‘400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் தொடர்பில் உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, ஒரு மாத காலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(05) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை இந்த மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது, நீதியரசர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.