வெளிநாடு செல்ல கோரிய பசில் ராஜபக்ஷவின் மனு ஒத்திவைப்பு..

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்லக் கோரி தாக்கல் செய்த வழக்கு பெப்ரவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக, அமெரிக்கா செல்ல அனுமதியளிக்குமாறு, தனது சட்டத்தரணியூடாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ செய்த வழக்கு தொடர்பிலான விசாரணையினையே, எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு, இன்று(25), கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.