சட்டவிரோதமான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(02) அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் அவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான யுரோ மற்றும் சவூதி ரியால் போன்ற வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.