வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட் அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை…

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹங்வெல்லையில் இருந்து முகத்துவாரம் வரையில் கொங்கிரீட்டு அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலநிலை அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நதியின் இரு மருங்கிலும் 3 மீற்றர் உயரத்தில் இரண்டு மதிலும், கொங்கிரீட்டு அணைக்கட்டுகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலநிலை அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.