வெள்ளவத்தை 42ஆம் இலக்க ஒழுங்கையில் குறித்த விபச்சார விடுதி நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளவத்தைப் பொலிஸாரால் குறித்த விபச்சாரவிடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது 5 பெண்களை கைது செய்ததாகவும், இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட பெண்கள் கண்டி, பாதுக்க, மீகமுவ மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் வெள்ளவத்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.