வெள்ளை வேன் சம்பவம் – இருவரும் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெள்ளை வாகன சாரதியொருவரும், வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட ஒருவருமே இவ்வாறு பகிரங்கமாக விடயங்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.