வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாகவும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 21ம் திகதி வரை ஏனைய வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த அனைத்து சபைகளிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.