வாக்குறுதிகளின் பிரகாரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி நியமனங்கள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனங்களை விரைவில் வழங்குமாறு கோரி இன்று(14) கொழும்பில் ஒன்று கூடவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பிற்கு வருகை தரும் பட்டதாரிகள் தமக்கு நியமனங்களை வழங்குமாறு கோரி அரசிற்கு பொறுப்பான அதிகாரியிடம் குறிப்பொன்றினை வழங்க உள்ளதாகவும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சிற்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்க குறித்த சங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.