வேலை நிறுத்தத்திற்கு முன்னர் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் பிரதமரை சந்திக்கின்றது..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நாளை(26) இடம் பெறவுள்ள பேச்சு வார்த்தையின் பின்னர் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் தொழிற்சங்க இணைப்பாளர் வீ.ஜே ராஜகருணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பிரதமருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய விவகாரம், ஹம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் தாங்கி தொகுதி மற்றும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)