வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கமைய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையினால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்ததாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய மேலும் தெரிவித்தார்.

எனினும் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் அந்த தீர்மானத்தை கைவிட்டதாக அவர் கூறினார்.