வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்குச் சட்டம் விடுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்தியம் உள்ளிட்ட வைத்திய சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமது அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.