வைத்திய தேவைக்காக கோட்டாபயவுக்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நீடிப்பு

(FASTNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று(19) விசாரணைக்கு வந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இறுதய சிகிச்சை காரணமாக 06 வார காலம் ஓய்வு தேவை என சட்டத்தரணி கோரியுள்ளார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 24ம் திகதி வரை அவர் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.