வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் 39 வயதான ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, மாவத்தகம – புசல்லாவ பகுதியிலும் 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று(16) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.