ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து (update)

(FASTNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுமே இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.