ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று(03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியுடன் நேற்று(03) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவை எடுத்துள்ளதாகவும் குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.