ஷரீஆ சட்ட வங்கிகள் – அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை அரசு பெற்றுக் கொள்­வ­தற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஜனா­தி­பதி மக­ஜ­ரொன்­றினைக் கையளித்தனர்.

குறித்த மகஜர் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கே­யினால் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு வாரங்களில் அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி செயலகம் பிரதமரின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

bodubalasena-letter

(riz)