(FASTNEWS|COLOMBO) – குருநாகல் மருத்துவர் மொஹமட் ஷாபிக்கு எதிராக தாய்மார்கள் வழங்கியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு காசல் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்தியசாலைகளில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் வைத்தியர் மொஹம்மட் ஷாபி தொடர்பான விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு பரிசோதனைகளை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.