ஷிகார் தவான் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகல்

(FASTNEWS | COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவானுக்கு உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலக நேரிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 09ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் பின்னர் அவரது இடது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.