ஷிராந்தி ராஜபக்ஷ சி.ஐ.டி முன்னிலையில்.. – கலவரம் அடக்கும் பொலிசார் களத்தில்..

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் இனது கொலை விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிகமானோர் குறித்த இடத்திற்கு முன்னாள் கறுப்புப் பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிசார் தண்ணீர் பிரயோக வாகனங்கள் மற்றும் கலவரத்தினை அடக்கும் இரதங்களுடன் அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)