ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று(14) விசேட சந்திப்பு…

(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது அரசியல் கூட்டணி மற்றும் சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிலாப மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ ஆகியோர் பங்கேற்கவுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில், அதன் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.