ஸ்ரீ.சு.கட்சியின் தலைமையில் இருந்து விலகத் தயார்…

ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(09) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“.. கட்சியின் வளர்ச்சியை முன்னிட்டு அவசியம் ஏற்பட்டால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகத் தயார். கட்சியின் முன்னேற்றத்திற்காகவும், அதன் வெற்றிப் பயணத்திற்காகவும் அனைத்து உறுப்பினர்களும் கடமைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.