(FASTNEWS|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் இன்று(05) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரவு செலவு திட்டத்திற்கான வாக்களிப்பு குறித்து தீர்மானிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு இன்று மாலை கூடவுள்ளது.
இதேவேளை, வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஜே.வீ.பி முன்னரே அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.