ஸ்ரீ.சு.பொ.முன்னணியின் பெயரிட்ட ஆவணம் சமர்ப்பிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், தேசிய அமைப்பாளர்களாக விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகரவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.