ஸ்ரீ.பொ.முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் 11 அன்று

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 11 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இறுதியான அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வதற்குத் தேவையான சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிஹிந்தலை ரஜமகா விகாரையை சூழவுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடுவதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்க் கட்சித் தலைவரை நேற்று(14) சந்தித்தபோதே எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.