ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை முன்னேற்ற 10 முதலீட்டாளர்கள் ஆதரவு.

ஸ்ரீ லங்கன் விமான சேவையை இலாபம் உழைக்கும் நிறுவனமாக உயர்த்துவதற்கு 10 முதலீட்டாளர்கள் தற்பொழுது வரையில் முன்வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த முதலீட்டாளர்கள் தற்பொழுது அந்த நிறுவனம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், இந்த மாதம் நிறைவில் குறித்த முதலீட்டாளர்கள் தமது ஆய்வு முடிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.