(FASTNEWS|COLOMBO) – ஹட்டன் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் பெய்த கடும்மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பமும், மின் கம்பியும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு மற்றும் அவிசாவளை செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.