ஹட்ஷன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

அரச சொத்துக்கள், சிறப்புரிமைகள் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்தமை குறித்து வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹட்சன் சமரசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.

பாரிய ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கே ஹட்சன் சமரசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யவே அவர் ஆணைக்குழுவுக்குச் சென்றுள்ளார்.