ஹத்துருசிங்கவின் பயிற்சியின் முதலாவது தொடர் குறித்து மேத்யூஸ் கருத்து..

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று(13) பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று(12) இடம்பெற்ற சமய நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அணி சிறந்த மனநிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் முதலாவது தொடர் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

#rishma