ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

(FASTNEWS|COLOMBO) ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர தேசிய வனாந்தரத்தில் யானைகள் சரணாலயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுமார் 3000 ஹெக்டயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள சரணாலயத்திற்கு 84 கோடி ரூபா செலவழிக்கப்பட உள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் குழப்பம் விளைவிக்கும் யானைகளைப் பிடித்து சரணாலயத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், சரணாயலத்தைச் சுற்றி 30 கிலோ மீற்றர் சுற்றளவிலான யானை வேலி அமைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.