தலைமைத்துவ பயிற்சி வழங்கும் நிகழ்வின் போது, அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் குறித்த இந்த சம்பவம் தொடர்பில் 02 அதிகாரிகள் அவர்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை அதிபர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கான சுய ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பயிற்சிக்கான நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வின் போதே ஹம்பாந்தோட்டை சுச்சி தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#rishma