ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்துக்குச் சொந்தமான உப்பளம் ஒன்று அமைந்துள்ளது. இதில் சுமார் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் முகாமைத்துவம் மாவட்ட அபிவிருத்திக்குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
வருடந்தோறும் இங்குள்ள ஊழியர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கான போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவது வழக்கமாகும்.
எனினும் இந்த ஆண்டு உப்பள ஊழியர்களின் புத்தாண்டு போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஊழியர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.