ஹவாயில் கீலவேயா மலையில் ஏற்பட்ட கடும் எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 2000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று 6.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.