ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவிப்பு…

(FASTNEWS | USA) – அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 04 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிற நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மேலும், நியூயார்க் முன்னாள் நகராதிபதி மைக்கேல் புளூம்பெர்க்கும் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.