ஹெரோயினுடன் ஆறு பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் மாலைதீவு நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்களின் இரு மோட்டார் வாகனங்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.